<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<title>Volume 10 Issue 01</title>
<link href="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14401" rel="alternate"/>
<subtitle/>
<id>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14401</id>
<updated>2026-04-09T05:33:16Z</updated>
<dc:date>2026-04-09T05:33:16Z</dc:date>
<entry>
<title>போருக்குப் பின் இலங்கையின் வடமாகாண அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள், ஆற்றல்கள், சவால்கள்- ஒரு பொருளியல் நோக்கு</title>
<link href="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14410" rel="alternate"/>
<author>
<name>ஞானச்சந்திரன், ஞா</name>
</author>
<id>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14410</id>
<updated>2025-09-06T22:03:32Z</updated>
<published>2019-01-01T00:00:00Z</published>
<summary type="text">போருக்குப் பின் இலங்கையின் வடமாகாண அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள், ஆற்றல்கள், சவால்கள்- ஒரு பொருளியல் நோக்கு
ஞானச்சந்திரன், ஞா
இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகக விளங்கும் வடமாகாணம் 8,884 சதுர கிலோமீற்றர் மொத்த நிலப் பரப்பளவைக் கொண்டதோடு, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 13.22மூ உள்ளடக்கியது. மேலும் மொத்த நிலப் பரப்பளவில் 1இ981.30 சதுர கிலோ மீற்றர் காடுகளாகவும், 302.9. சதுர கிலோமீற்றர் கடல்களாகவும் உள்ளது. ஏறத்தாள 1.1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களைக் தன்னகத்தே கொண்டது. இந்த ஆய்வின் பிரதானமான நோக்கம் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை, அதன் உள்ளார்ந்த ஆற்றல்களை அறிவதோடு, பொருளாதார அபிவிருத்தியில் அது எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காண்பதாகவும் இருக்கும். ஆய்வுப் பிரச்சினையாக அல்லது சவாலாக வடமாகாணத்தின் புனுP பங்களிப்பு குறைவானதாக உள்ளமை, யுத்த காலத்தில் பெருமளவு நிலம் கையகப்படுத்தப்பட்டமை மற்றும் வடபுல மக்களின் வாழ்வாதார இழப்புக்கள், உயிரிழப்பு, ஊனம், சமூக பொருளாதார உட்கட்டமைப்புகள் அழிவுகள், வருமான சமமின்மையும் வறுமையும், யுத்த காலத்தில் உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் பின்னர் (2009 இன் பின்) படிப்படியான வளர்ச்சியும் ஆய்வு முறையாக இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டதோடு, விபரணப்புள்ளிவிபர முறை மூலம் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆ.ளு.நுஒஉநடட என்ற கணணி மென்பொருளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகள் மற்றும் சிபார்சுகளாக இங்கு நெல் பிரதான விவசாய உற்பத்தியாகவும், சின்னவெங்காயம், பச்சைமிளகாய், மரமுந்திரிகை, உருளைக்கிழங்கு, தென்னை, பனை, புகையிலை என்பன முக்கியமான ஏனைய விவசாய உற்பத்திகளாகவும் உள்ளன. மேலும் கைத்தொழில் நடவடிக்கைகளாக சீனிக் கைத்தொழில், கண்ணாடிக் கைத்தொழில், காகித உற்பத்தி, துணி உற்பத்தி, தீப்பெட்டி, சவர்க்காரம், பசளை போன்ற அன்றாட பாவனை உற்பத்தி போன்றவற்றுக்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதோடு நடுத்தர சிறுகைத்தொழில்கள், கிராமியக் கைத்தொழில்கள் இங்கு அபிவிருத்தியுற நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே வடக்கின் பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்த அரசு உடனடியாக குறைந்த வட்டி வீதத்தை&#13;
இவர்களுக்கு அறவிடுவதோடு,திருப்பிச் செலுத்தும் காலத்தைக் கூட்டி அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை கூட்டவேண்டும் சவால்களை வெற்றிகொள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை முழுமையாக விடுவித்தும், வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்தும் உற்பத்தித் துறைகளை வளர்க்க வேண்டும். வடக்கை பொருளாதார விருத்தியிலும் ஏனைய பிராந்தியங்களோடு இணைக்க வேண்டும், வேலைவாய்ப்புக்கள், போரால் பாதிக்கப்பட்ட சொத்துக்களை இழந்த குடும்பங்கள், குடும்பத்தலைமையை இழந்த குடும்பங்கள், வலுவிழந்தவர்கள், அங்;கவீனர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் இப் பகுதியினருக்கு அரச செலவீனத்தில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதியினரையும் முன்னேற்றுவதனூடாகத்தான் ஏனைய மாகாணத்தவருக்குச் சமனாக ஒரு பிராந்திய அபிவிருத்தியை ஏற்படுத்;தி, மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் ஏனைய மாகாணங்களுக்குச் சமனான பங்களிப்பை வடமாகாகாணமும்; வழங்க முடியும்.
</summary>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>இலங்கையில் முருக வழிபாடு: ஒரு வரலாற்றியல் நோக்கு (கி.பி.15ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டது)</title>
<link href="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14409" rel="alternate"/>
<author>
<name>குணபாலசிங்கம், வ</name>
</author>
<id>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14409</id>
<updated>2025-09-06T22:03:30Z</updated>
<published>2019-01-01T00:00:00Z</published>
<summary type="text">இலங்கையில் முருக வழிபாடு: ஒரு வரலாற்றியல் நோக்கு (கி.பி.15ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டது)
குணபாலசிங்கம், வ
இலங்கையிலே நிலவி வருகின்ற வழிபாட்டு மரபுகளில் முருக வழிபாடு பிரசித்தானது. இவ்வழிபாடு புராதன காலத்திலிருந்து சமூக வரலாற்றுடனும், சூழலியல் சார் பண்பாடுகளுடனும் இணைவு பெற்று வளர்ந்து வந்துள்ளது. பண்டைக்காலம் முதலாகத் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல், வணிக, பண்பாட்டு உறவுகளால் முருக வழிபாடு இங்கு வளர்ச்சியடைந்திருப்பினும், இலங்கைக்கே உரித்தான சில வழிபாட்டம்சங்களும் இதில் காணப்படுகின்றன. இலங்கையில் முருக வழிபாட்டின் தொன்மையைப் பொம்பரிப்பு, கந்தரோடை ஆகிய இடங்களிற் கிடைத்த வேல், காவடிச் செதில்கள் ஆகிய சின்னங்களால் உறுதிப்படுத்த முடிகின்றது. கி.பி.2ஆம் நூற்றாண்டிற்குரிய நாணயங்கள் அக்குறுகொட, புளியங்குளம், கந்தரோடை ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. அவற்றிலே முருக வழிபாட்டின் புராதனம் தெளிவாகின்றது. கி.பி.13ஆம் நூற்றாண்டுக்குரிய வில்லூன்றிக் கந்தசுவாமி கோயிலிற் கிடைத் கல்வெட்டு கிழக்கிலங்கை முருக வழிபாடு பற்றி அறியக் கூடிய புராதன சான்றாதாரமாகும். பொலன்னறுவையிற் கிடைத்த சுப்பிரமண்யருக்கான கோயிற் சிதைவும், வெண்கலப்படிமமும் முருக வழிபாட்டின் வளர்ச்சியைக் காட்டுகின்றன. யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் ஆட்சிக்காலப் பகுதியில் வெளியிடப்பட்ட நாணயங்களில் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் சிற்றுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் லங்காதிலக, கடலாதெனிய விகாரைகளில் உள்ள குமாரக்கடவுளுக்கானத் தனிக் கோட்டம் பௌத்தசமய மரபில் முருக வழிபாடு செலுத்திய செல்வாக்கைப் புலப்படுத்துகின்றது. இலங்கையின் முருக வழிபாட்டில் கதிர்காமத்திற்குரிய இடம் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முருகவழிபாட்டில் கிழக்கிலங்கையிலே பிரசித்தமுடையதாக விளங்கும் திருப்படைக் கோயில்களுக்கு முக்கியத்துவம் உண்டு. முருக வழிபாடுகள் காலம் காலமாக இலங்கை மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருவதனால் அவ்வழிபாட்டின் தொன்மையையும், தனித்துவங்களையும் அடையாளப்படுத்துவதும், கிழக்கிலங்கையிலுள்ள முருகன் கோயில்களில் இடம் பெறும் வழிபாடுகளுக்கிடையிலான பொதுமைகளையும், தனித்துவங்களையும் இனங்காண்பதும், இவ்வழிபாடுகளுடன் தொடர்பான பத்ததிகளின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதும், கிழக்கிலங்கையில் முருக வழிபாடு தொடர்பாக நிலவும் வாய்மொழிக் கதைகளில் உள்ள வரலாற்று மூலங்களை இனங்காண்பதுவும், முருக வழிபாட்டு முறைமைகளில் சமூக வழமைகள் இணைந்து கொண்டதன் பின்புலத்தினை மதிப்பிடுவதும் இவ்வாய்வின் நோக்கங்களாகும். இலங்கையில் தனித்துவமான முருக வழிபாட்டு முறைமைகளை அடையாளங் காண்பதில் உள்ள இடர்ப்பாடுகளே ஆய்வின் பிரதான பிரச்சினையாகவுள்ளது. இவ்வாய்வு வரலாற்று ஆய்வுமுறை, ஒப்பீட்டு ஆய்வுமுறை, விபரண ஆய்வுமுறையிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இலங்கையின் முருக வழிபாட்டு முறைகளே ஆய்வு எல்லையாகும். இவ்வாய்வானது&#13;
சிறப்பாக இலங்கையிலுள்ள முருகவழிபாட்டின் தனித்துவங்களை வெளிக்கொணர்வதனால் இலங்கையில் நிலவுகின்ற ஏனைய தெய்வ வழிபாடுகளின் தனித்துவங்களை ஆராய முற்படுவோருக்கு முன்னோடியாக அமைவதுடன், மிகப்பழமையான தெய்வ நம்பிக்கைகளையும் அவற்றுடன் தொடர்புடைய வழிபாடுகளையும் பின்பற்றுகின்ற சமுதாயங்களின் வரலாறு பற்றி ஆராய்வதற்கு வழிவகுக்கும்.
</summary>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>A Study of Land Cover Change Detection in Oddusuddan DS Division of Mullaitivu District in Sri Lanka based on GIS and RS Technology</title>
<link href="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14408" rel="alternate"/>
<author>
<name>Pathmanandakumar, V</name>
</author>
<id>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14408</id>
<updated>2025-09-06T22:03:28Z</updated>
<published>2019-01-01T00:00:00Z</published>
<summary type="text">A Study of Land Cover Change Detection in Oddusuddan DS Division of Mullaitivu District in Sri Lanka based on GIS and RS Technology
Pathmanandakumar, V
Land cover change analysis between 1997 and 2016 was conducted in Oddusuddan Divisional Secretariat, Mullaitivu District, using remote sensing and geographic information system incorporated with field verifications. Various Satellite images and different digital maps have been used for extracting information. The overall Objective of this study was to detect the magnitude of land cover change in Oddusuddan between 1997 and 2016. The methodology of this study was a change detection analysis of satellite imagery with Landsat ETM data. Two dates of Landsat image data of the 1997 and 2016 were used to produce land cover map. The Maximum Likelihood algorithm was used for supervised classification to detect changes over period of twenty years. The result showed that during the last twenty years, the forest cover declined from 453.02 km2 in 1997 to 447.14 km2 in 2016. It was noticed that socioeconomic factors were the major driving forces for the land cover change.
</summary>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>காலனித்துவ ஏகாதிபத்திய காலத்தில் அறபு மொழிக்கு ஏற்பட்ட வீழ்ச்சியும் அதனைப் பின்தொடர்ந்த எழுச்சியும்</title>
<link href="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14407" rel="alternate"/>
<author>
<name>தாலிப், ஐ.எம்</name>
</author>
<id>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14407</id>
<updated>2025-09-06T22:03:27Z</updated>
<published>2019-01-01T00:00:00Z</published>
<summary type="text">காலனித்துவ ஏகாதிபத்திய காலத்தில் அறபு மொழிக்கு ஏற்பட்ட வீழ்ச்சியும் அதனைப் பின்தொடர்ந்த எழுச்சியும்
தாலிப், ஐ.எம்
அறபு மொழியிலேயே அல்குர்ஆன் அருளப்பட்டு அதனூடாக நபிகள் நாயகத்தின் போதனைகள் நிகழ்த்தப்பட்டது என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் மத்தியில் இம்மொழிக்கு ஆன்மீக, லௌகீக ரீதியிலான பலமான உறவு இருந்துவரும் அதேவேளை, ஏனைய சமூக மக்களிடமும் இலக்கிய மொழி, சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழி என்ற வகையிலும் அறபு மொழி மகத்துவமிக்க மொழியாக கருதப்படுகிறது. உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அதிகார மாற்றங்களால் அறபுமொழி திட்டமிடப்பட்ட பல தேக்க நிலைகளைச் சந்தித்தது. அதன் விளைவுகளும் தாக்கங்களும் இன்னும் எதிரொலித்தாலும் அச்சவால்களை முறியடித்து, இன்றைய நவீன யுகத்தில் அறபு மொழியானது அரசியல், பொருளாதார, வர்த்தக துறைகளில் மேம்பட்டு விளங்குவதோடு, தேசிய மற்றும் சர்வதேச இராஜதந்திர கேந்திர முக்கியத்துவமிக்க அம்சங்களான சமாதானம், சகவாழ்வு மற்றும் பாதுகாப்பு போன்ற சர்வதேச உறவுகள் தொடர்பான அனைத்து துறைகளிலும் இன்றியமையாத ஒரு ஊடகமாக திகழ்கிறது. அறபு மொழி காலனித்துவ ஏகாதிபத்திய அதிகாரத்தால் மிகவும் நசுக்கப்பட்டு, அறேபிய தேசத்து மக்களுக்கே அது தாய்மொழி என்ற இயல்பான அந்தஸ்தையும் இல்லாதொழிக்க, அதனை அறிவியல் அரங்கை விட்டும் புறந்தள்ளப்பட்ட போதிலும், இம்மொழி மீண்டும் புத்தெழுச்சி பெற்று, உலக அரங்கில் அதிகமானோரால் பேசப்படும் முதன்மையான மொழிகளில் ஒன்றாக எவ்வாறு முன்னேறியது என்ற நியாயமான வினா எழுவது இயல்பானதாகும். இவ்வினாவுக்கு வரலாற்று ரீதியான நிகழ்வுகளை மேற்கோள் காட்டுவதுடன், பல்வேறு சவால்களையும் சதிகளையும் முறியடித்து இம்மொழி வீறுநடைபோடுவதற்கு புராதன மற்றும் நவீன அறிஞர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை வரலாற்று ரீதியான திறனாய்வின் மூலம் இவ்வாய்வு விடைகான விளைகிறது. இதற்கான தரவுகள் துறைசார் அறிஞர்களின் நூற்களிலிருந்து பெறப்பட்டு, பகுப்பாய்வினூடாக தரம்பிரிக்கப்பட்டு வரலாற்று ரீதியான தகவல்களை ஆதாரபூர்வமாக முன்வைப்பதற்கு துணைபுரிகின்றன. வியக்கத்தக்க பல சவால்களுக்கும் தாக்கங்களுக்கும் முகங்கொடுத்த அறபு மொழி வீறுகொண்டு நடைபயில்வதை வரலாற்று கண்ணோட்டத்தில் இக்கட்டுரை விவாதிக்கிறது. இதன் உசாத்துணைகள் யாவும் அறபு மொழி ஆக்கங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
</summary>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</entry>
</feed>
