<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<channel rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/14391">
<title>Department of Social Sciences</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/14391</link>
<description/>
<items>
<rdf:Seq>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14423"/>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14422"/>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14421"/>
<rdf:li rdf:resource="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14420"/>
</rdf:Seq>
</items>
<dc:date>2026-04-21T13:00:44Z</dc:date>
</channel>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14423">
<title>நல்லாட்சிக் கோட்பாடும் இலங்கையில் அதன் பிரயோகமும்: 2015இல் இருந்து 2018 வரை</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14423</link>
<description>நல்லாட்சிக் கோட்பாடும் இலங்கையில் அதன் பிரயோகமும்: 2015இல் இருந்து 2018 வரை
Kanneraj, A
இலங்கையில் சமகால அரசியலில் அதிகம் உச்சரிக்கப்படுகின்ற ஒரு விடயமாக நல்லாட்சி என்னும் பதம் மாறியிருக்கின்றது. தேசிய அரசாங்கம் ஆட்சி புரிகின்ற இக்கால கட்டத்தில், நல்லாட்சி பற்றிய சிறந்த புரிதலைப் பெற்றுக்கொள்வது அவசியமானதாகும். இதனடிப்படையில், நல்லாட்சி என்றால் என்ன? என்பதனைக் கோட்பாட்டு ரீதியில் விளங்கிக்கொள்வது அவசியமானதாகும். இக்கோட்பாட்டின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கமாக மதிப்பீடு செய்ய முடியுமா? என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது பண்புசார் ஆய்வு முறையியல் அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்டது. இப்பண்புசார் தகவல்கள் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. குறித்த தரவுகள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவானது, நடைமுறையில் உள்ள தேசிய அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கமாகக் குறிப்பிடுவது கேள்விக்குரியதாகும் என்பதனை வலியுறுத்துகின்றன. எவ்வாறாயினும், கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிடும் போது நல்லாட்சிப் பண்புகள் சில நடைமுறைப்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது மறுப்பதற்கில்லை. இதனடிப்படையில் இத்தேசிய அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கம் என்பதனைவிட நல்லாட்சி நோக்கிப் பயணிக்க எத்தனிக்கின்ற அரசாங்கமென்று கூறுவதே பொருத்தமானதாகும் என்பது இவ்வாய்வின் முடிவாகும்.
</description>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14422">
<title>இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை: தமிழ் சிறுபான்மை நோக்கில் - ஓர் கருத்தாடல்</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14422</link>
<description>இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை: தமிழ் சிறுபான்மை நோக்கில் - ஓர் கருத்தாடல்
Kanneraj, A
உலகநாடுகளில் பல்வேறு அரசாங்க முறைமைகள் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. அது அவ்வவ் நாட்டின் வரலாறு, அரசியல் பின்னணி போன்றவற்றினால் தீர்மானிக்கப்படுகின்றது. அதேவேளை ஒரு நாட்டில் பின்பற்றப்படுகின்ற அரசாங்க முறைமை சிறந்ததாக விளங்குகின்றது என்பதற்காக, ஏனைய நாடுகள் அம்முறைமையைப் பின்பற்ற முடியாது. அவ்வாறு பின்பற்ற முற்பட்டதன் விளைவே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கான நாற்பது வருடகால வரலாறாகும். இதில் தனிமனித விருப்பும் தாக்கம் செலுத்தியிருந்திருந்தது.&#13;
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான முயற்ச்சிகள் மிக நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. ஆயினும், அதன் இறுதி இலக்கு இன்னும் அடையப்படவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பது தமிழ் மக்கள் பார்வையில், சாதகமானதா? அல்லது பாதகமானதா? என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது பண்பு ரீதியானதொரு ஆய்வாக அமைந்துள்ளது. இவ்வாய்விற்குத் தேவையான தரவு மூலங்கள் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. &#13;
இவ்வாய்வின் பிரதான நோக்கமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தமிழ்ச் சிறுபான்மை இனத்திற்கு சாதகமாகவுள்ளதா? அல்லது பாதகமாகவுள்ளதா? என்பதனை அறிதல் ஆகும். அத்துடன் இவ்வாய்வின் துணைநோக்கமாக, நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு மாற்றீடாக முன்வைக்கப்படும் மாற்று வழிமுறை தொடர்பில் தமிழ்ச் சிறுபான்மை இனத்தின் பார்வையின் சாதக அம்சங்களை அறிதலும் ஆகும்.&#13;
தமிழ் மக்கள் தனித்து அரசாங்க முறைமையினை மாத்திரம் மாற்றியமைப்பதால் தமது அரசியல் அபிலாசைகளை அடைந்துவிட முடியாது. அதற்கும் அப்பால், சிறந்த அரசியல் பங்குபற்றலினாலும், தூர நோக்குடைய அரசியல் சிந்தனைகளினாலுமே தமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்பதனையும் அவ்வாய்வு முன்மொழிகின்றது.
</description>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14421">
<title>யுத்தத்தின் பின்னரான மட்டக்களப்பு மாவட்டத்தின உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம்: விசேட ஆய்வு மண்முனை மேற்கு மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகள்</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14421</link>
<description>யுத்தத்தின் பின்னரான மட்டக்களப்பு மாவட்டத்தின உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம்: விசேட ஆய்வு மண்முனை மேற்கு மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகள்
Kanneraj, A
உள்ளூராட்சி மன்றங்கள் ஜனநாயகத்தின் அடிமட்ட அலகுகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவ் மன்றங்களில் சமூகத்தின் இரு பாலாரினதும் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டிருப்பது அவசியமானதாகும். ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள வவூணதீவு மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக இறுதியாக 2008 மார்ச் 10ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் பெண் பிரதிநிதிகள் எவரும் தோர்வு செய்யப்படவில்லை. பிரதேச சனத்தொகையில் அதிகளவினராகக் காணப்படும் பெண்கள், மக்கள் பிரதிசிதிகளாகத் தேர்வு செய்யப்படாமை என்பதை ஆய்வுப் பிரச்சிகைனயாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. &#13;
உள்ளூராட்சி மன்றங்களே குறித்த பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளுகின்றன. அவ்வாறு கொள்கைத் தீர்மான்களை மேற்கொள்ளும் போது பெண்கள் மற்றும் சிறார்கள் தொடர்பிலான தீர்மானங்கள், பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றி ஆண்களினால் மேற்கொள்ளப்படுவது சிறப்பானதொரு விடயமல்ல. அத்துடன் குறித்த கொள்கைத் தீர்மானங்கள் எதிர்பார்க்கப்பட்ட பலாபலன்களைக் கொண்டுவராது என்பது கண்கூடு.&#13;
மறுபுறம் குறித்த இரு பிரதேசங்களும் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டதும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களையும் அதிகமாகக் கொண்ட பிரதேசங்களுமாகும். அத்தகைய  பிரதேசத்தின் அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதிகளாக எவரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான காரணங்களை கண்டறியும் நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</description>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14420">
<title>மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்களிப்பு நடத்தை; யுத்தத்தின் பின்னரான உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14420</link>
<description>மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்களிப்பு நடத்தை; யுத்தத்தின் பின்னரான உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Kanneraj, A
பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அச்சாணி வாக்களிப்பு ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாகத் தமிழ் மக்களும், சிறுபான்மையாக முஸ்லீம் மக்களும் வாழ்கின்றனர். ஆயினும், அவர்களிடையே வாக்களிப்பு நடத்தையில் வித்தியாசம் காணப்படுகின்றதா? என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.&#13;
ஈரினம் வாழும் இம்மாவட்டத்தில், ஓர் இனம் வாக்களிப்பு நடத்தையில் பின்தங்கி நிற்கும்போது, அது அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆகையால், உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்துள்ள நிலைமையில், ஈரின மக்களிடையேயும் வாக்களிப்புத் தொடர்பில் சமாந்தரமான போக்கு காணப்படுகின்றதா? என்பது  பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.&#13;
இவ்வாய்வானது, கலப்பு ஆய்வுமுறையியல் அணுகுமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இப்பண்பு, மற்றும் தரவுசார் தகவல்கள் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.&#13;
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன ரீதியான வாக்களிப்பு நடத்தை தொடர்பாக ஏன் ஆய்வு செய்யப்பட வேண்டும் என வினாவுவேமாயின், மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் மாவட்ட அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன. இத்தேர்தல் பெறுபேற்றின் அடிப்படையிலேயே குறித்த இனத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் தீர்மானிக்கப்படுகின்றது. இங்கு ஓர் இனம் வாக்களிப்பு நடத்தையில் அசமந்தப் போக்கை வெளிப்படுத்துமெனில், தமது இனத்தின் விகிதாசாரத்திற்குக் குறைவான அரசியல் பிரதிநிதுத்துவத்தையே பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலை குறித்த சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான பின்னடைவை ஏற்படுத்தும்.
</description>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</item>
</rdf:RDF>
