<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
<channel>
<title>தொகுதி: 5, எண்: 1</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4276</link>
<description/>
<pubDate>Tue, 21 Apr 2026 12:42:32 GMT</pubDate>
<dc:date>2026-04-21T12:42:32Z</dc:date>
<item>
<title>ஈழத்துக் கூத்துப் பிரதிகள் பதிப்பு மரபும் 'குருக்கேத்திரன் போர்'</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4291</link>
<description>ஈழத்துக் கூத்துப் பிரதிகள் பதிப்பு மரபும் 'குருக்கேத்திரன் போர்'
வீ.அரசு
தமிழகத்திலும் ஈழத்திலும் வாய்மொழி மரபு, ஆற்றுகை மரபு, ஓலைச்&#13;
சுவடி மரபு, கையெழுத்துப் பிரதிகள் மரபு என்பவை எவ்வாறு அச்சு&#13;
மரபிற்குள் கொண்டுவரப்படுகின்றன? என்ற விடயம் குறித்து விரிவான&#13;
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்ற வினாவை எழுப்பிக்&#13;
கொள்ளலாம். பழைய மரபிலிருந்து புதிய மரபிற்குள் ஒரு பிரதி&#13;
மாற்றம் பெறும் போது, அதன் மூலம் உருப்பெறும் பல்வேறு&#13;
பரிமாணங்கள் குறித்தும் உரையாடுவது அவசியம். இந்தப் பின்புலத்தில்&#13;
வடிவேல் இன்பமோகன் பதிப்பித்துள்ள 'குருக்கேத்திரன் போர்&#13;
(வடமோடிக் கூத்து)' (2017) என்னும் பிரதி உருவாக்கம் எவ்வாறு&#13;
நிகழ்ந்துள்ளது என்பது தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை&#13;
இத்தருணத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
</description>
<pubDate>Mon, 01 Jan 2018 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4291</guid>
<dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>இலங்கைப் பெண் கவிதைகளில் ஆண்களும் அதிகாரமும்</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4290</link>
<description>இலங்கைப் பெண் கவிதைகளில் ஆண்களும் அதிகாரமும்
எம்.எம். ஜெயசீலன்
பெண்ணியக் கருத்துநிலைகளும் அவை பற்றிய உரையாடல்களும்&#13;
ஆணாதிக்கத்துக்கு எதிரான உரையாடல்களாகவே ஆரம்பமாகின்றன.&#13;
ஆண் அதிகாரச் சமூகமும் அதன் ஆதிக்கக் கருத்துருவங்களும்&#13;
பெண்களின் சுயாதீனமான இருத்தலுக்குப் பெருஞ் சவாலாக&#13;
விளங்குகின்றன. அதனால் பெண்களின் இருப்புப் பற்றிய எல்லாவிதமான&#13;
உரையாடல்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆண்&#13;
அதிகாரத்துடன் தொடர்புபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. பெண்களின்&#13;
சுயாதீனமான இருத்தலை நிலைநிறுத்த முயற்சிக்கும் பெண்ணியம்,&#13;
நிலவுகின்ற மரபார்ந்த ஆணாதிக்கச் சமூக அமைப்பையும் அச்சமூக&#13;
அமைப்பைக் கட்டிக்காக்கும் கருத்துருவங்களையும் நிராகரித்து,&#13;
அவற்றை மீள்நிர்மாணம் செய்ய முயற்சிப்பதோடு அம்மீள்நிர்மாணத்திற்குத்&#13;
தடையாக அமையும் அனைத்துத் தளைகளையும் தகர்த்தெறிவதற்கான&#13;
கலகத்தையும் முன்னிறுத்துகின்றது. அதனாலேயே பெண்ணிய&#13;
நிலைப்பட்ட அணிதிரட்டல், விழிப்புணர்வு முதலிய போராட்டச்&#13;
செயற்பாடுகள் யாவும் ஆண் அதிகாரத்தை எதிர்ப்பதையும் பால்&#13;
அசமத்துவத்தை நிர்மூலமாக்குவதையும் மையச்சரடாகக் கொண்டுள்ளன.
</description>
<pubDate>Mon, 01 Jan 2018 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4290</guid>
<dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>தெருக்கூத்துப் பாணிகள்</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4289</link>
<description>தெருக்கூத்துப் பாணிகள்
இரா. சீனிவாசன், மு. ஏழுமலை
தமிழகத்தின் கலை வடிவங்களில் தொன்மையானதாகவும், அரங்கக்&#13;
கூறுகளை முழுமையாக உள்வாங்கியும் உள்ள நிகழ்த்துக்கலை வடிவம்&#13;
தெருக்கூத்துக் கலையாகும். இத்தகைய தெருக்கூத்துக் கலை குறித்து&#13;
ஆராயும்பொழுது, தெருக்கூத்துப் பாணிகள் குறித்தும் கவனம் செலுத்த&#13;
வேண்டியது இன்றியமையாததாகும். இந்நிலையில், தெருக்கூத்துக்&#13;
கலையில் பாணி என்றால் என்ன? எத்தகைய வேறுபாடுகளால் பாணி&#13;
அடையாளப்படுத்தப்படுகிறது? எத்தனை வகையான பாணிகள் உள்ளன?&#13;
இப்பாணியை அங்கீகரிப்பவர்கள் யார்? அங்கீகரிப்பவர்கள் எத்தகைய&#13;
பயிற்சியைப் பெற்றவர்கள்? என்னும் பன்முகப் பார்வையில் ஆராயும்&#13;
பொழுதுதான் தெருக்கூத்துப் பாணிகள் குறித்த முழுமையான&#13;
புரிதலைப்பெற முடியும்.
</description>
<pubDate>Mon, 01 Jan 2018 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4289</guid>
<dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>சூழலியல் அழகியலும் பேண்தகு அபிவிருத்தியும்</title>
<link>http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4288</link>
<description>சூழலியல் அழகியலும் பேண்தகு அபிவிருத்தியும்
இ. பிறேம்குமார்
20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் தோன்றிய&#13;
அழகியல் சார்ந்த துறைகளுள் ஒன்றாக சூழலியல் அழகியல் காணப்&#13;
படுகின்றது. இயற்கை சூழல் பற்றிய ஆய்வுகள் முன்னொருபோதும்&#13;
இல்லாத அளவிற்கு பல்வேறு துறைகள் சார்ந்த அறிஞர்களினாலும்&#13;
ஆராய்ச்சியாளர்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்காலப்&#13;
பகுதியில் சூழல் பற்றிய அழகியல் நோக்கு முக்கியத்துவம் பெறுகின்றது.&#13;
சூழலியல் அழகியலில் அடிப்படை சிந்தனைகளை நாம் ஜேர்மானிய&#13;
மெய்யியலாளரான இமனுவல் காண்டிடம் காணமுடிகின்றது. காண்ட்&#13;
அளவிடமுடியா அழகு என்ற கருத்தின் அடிப்படையில்&#13;
இயற்கை சூழலின் அழகினை எமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.&#13;
இத்தகைய நோக்கு சூழலியல் அழகியலின் ஆரம்பமாக அமைந்து&#13;
விடுகின்றது. இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழல்&#13;
தொடர்பான அழகியல் சார்ந்த விடயங்களையும் மதிப்பீடுகளையும்&#13;
உள்ளடக்கிய துறையாக சூழலியல் அழகியல் காணப்படுகின்றது.&#13;
அழகியல் வரலாற்றில் சூழல் சார்ந்த அழகியலுடன் தொடர்புபட்ட&#13;
நயத்தல்  என்பது பல வளர்ச்சி நிலைகளை கண்டுள்ளது.&#13;
18 ஆம் நூற்றாண்டில் இருந்து தற்காலம் வரை பல கட்டளைபடிம மாற்றங்களை இந்தத் துறை கண்டுள்ளது. இவற்றை ஒன்றன்&#13;
பின் ஒன்றாக நோக்குவோம். சூழலியல் அழகியலின் வளர்ச்சியினை&#13;
கட்டளைபடிம அடிப்படையில் நோக்குதல் சூழலியல் அழகியலை&#13;
புரிந்துகொள்வதற்கு மிக இலகுவான வழியாகும்.
</description>
<pubDate>Mon, 01 Jan 2018 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://www.digital.lib.esn.ac.lk//handle/123456789/4288</guid>
<dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
</item>
</channel>
</rss>
