பாடசாலை மாணவர்களின் கற்றலில் ஒழுக்க பிரச்சினைகள் ஏற்படுத்தும் செல்வாக்கு

Show simple item record

dc.contributor.author ஜெயக்குமார், மயில்வாகனம்
dc.date.accessioned 2024-03-15T05:39:57Z
dc.date.available 2024-03-15T05:39:57Z
dc.date.issued 2023
dc.identifier.citation MED350 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15176
dc.description.abstract "பாடசாலை மாணவர்களின் கற்றலில் ஒழுக்கப் பிரச்சினைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள்"(திருக்கோவில் கல்விவலய திருக்கோவில் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 1AB, 1C, Type-2 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) 1A8,1C,Type-2 வகைப்பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களிடையே காணப்படும் நெறிபிறழ்வான நடத்தைகளின் செயற்பாடுகளால் இப்பிரதேசப் பாடசாலைகளிலே கற்றலில் இடர்படும் நிலை தோன்றுகின்றது. இதனடிப்படையிலேயே "பாடசாலை மாணவர்களின் கற்றலில் ஒழுக்கப் பிரச்சினைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை கண்டறிதல்" எனும் ஆய்வு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வானது திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, திருக்கோவில் கல்வி வலயத்தின் திருக்கோவில் கோட்ட பாடசாலைகளினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்காக ஆய்வு மாதிரிகளாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்விற்கென தெரிவு செய்யப்பட்ட 04 பாடசாலைகள் நோக்கமாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் படிமுறையாக்கப்பட்ட மாதிரி மூலம் தெரிவு செய்யப்பட்டு பின்பு எளிய எழுமாற்று மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்விற்கான தரவுசேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் ஆகியன பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாகப்பெறப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் பொருத்தமான மென்பொருள் முறைகளினூடாக பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன. சிரேஸ்ட இடைநிலை வகுப்புக்களில் ஒழுக்கப் பிரச்சினையானது பாரிய தாக்கத்தினைச் செலுத்துகின்றது. இத் தாக்கமானது பாடசாலைகளின் அடைவு மட்டத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. அதாவது இப்பாடசாலைகளின் வளர்ச்சியில், பரீட்சைகளின் அடைவுமட்டங்கள் குறைதல், பாடசாலைகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படல், மாணவர்கள் பாடசாலைக் கல்வியை புறந்தள்ளிச் செயற்படுதல், இணைப்பாட விதானச் செயற்பாடுகளிள் அக்கறையின்மையால் சாதனை மட்டங்களில் தொய்வு நிலை, கற்றல் கற்பித்தல் சூழல் பாதிப்படைதல், பாடசாலைகள் குறித்த இலக்கினை நோக்கி பயணிக்க முடியாமை போன்ற பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது எனக்கண்டறியப்பட்டதோடு, இது தொடர்பில் பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விதப்புரைகளும் இவ் ஆய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject ஒழுக்கம் en_US
dc.subject கற்றல் en_US
dc.subject வகிபாகம் en_US
dc.subject இடைநிலைப்பிரிவு en_US
dc.title பாடசாலை மாணவர்களின் கற்றலில் ஒழுக்க பிரச்சினைகள் ஏற்படுத்தும் செல்வாக்கு en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account