சிரேஷ்ட இடைநிலை பிரிவு மாணவர்களின் பாடசாலை வரவின்மை கற்றல் அடைவில் ஏற்படுத்தும் தாக்கம்

Show simple item record

dc.contributor.author SUTHAKARAN, ILATCHUMANAN
dc.date.accessioned 2024-03-18T05:11:47Z
dc.date.available 2024-03-18T05:11:47Z
dc.date.issued 2023
dc.identifier.citation MED339 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15183
dc.description.abstract சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் பாடசாலை வரவின்மை கற்றல் அடைவில் ஏற்படுத்தும் செல்வாக்கு "பட்டிருப்பு கல்லி போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 1A8,ICTYPE 11 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண் IAB,IC TYPE 11 வகைப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொளிப்பட்டது. மாணவர்களின் பாடசாலை வரவின்மையால் இப்பிரதேசப் பாடசாலைகளிலே கற்றலில் பிள்தங்கிய நிலை தோன்றுகின்றது. இதனடிப்படையிலேயே "சிரேஷ்ட இடைநிலைப்பிரிவு மாணவர்களின் வரவின்மை கற்றல் அடையில் ஏற்படுத்தும் செல்வாக்கு" எனும் ஆய்வு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வானது போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இல்லாய்யிற்காக ஆய்வு மாதிரிகளாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்விற்கான தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து நேர்காணல், அவதானம் ஆகியன பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்பு சார் தரவுகள் பொருத்தமான மென்பொருள் முறைகளினூடாக பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன. பகுப்பாய்வு மூலம் பல்வேறு முடிவுகளைக் கண்டறிய முடிந்தது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வியைக் கற்க விருப்பமுடையவர்களாக இருந்தும் கற்றலுக்குத் தேவையான வசதிகிடைக்காமை பெற்றோரின் தாழ் கல்வி நிலை குறைந்த வருமானம்,பிள்ளைகள் தொழிலுக்குச் செல்லுதல், இளவயதுத் திருமணம், கணவன் மனைவி பிரிந்து வாழ்தல் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் பாடசாலை வரவு குறைவாகக் காணப்படுவதனை காணக் கூடியதாகவுள்ளது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர்,ஆசிரியர் பாடசாலைச் சமூகம் ஆகியோரின் பங்களிப்பினை ஆராய்வதுடன் அதற்கான தீர்வாக பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கும் சமூகத்தினருக்கும் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்துதல் ஆலோசனை வழங்குதல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இடைநிலைப் பிரிவு மாணவர்களின் வரவின்மை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு அடைவு மட்டத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. அதாவது இப்பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தியில், பரீட்சைகளின் அடைவு மட்டங்கள் குறைதல், இணைப்பாட விதானச் செயற்பாடுகளின் சாதனை மட்டங்களில் தொய்வு நிலை, கற்றல் சூழல் பாதிப்படைதல். மாணவர் விருப்பமான பாடத்தை தெரிவு செய்து கற்க முடியாமை. பாடசாலைகள் குறித்த இலக்கினை அடையமுடியாமை போன்ற பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. இது தொடர்பாக பல பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விதப்புரைகளும் இவ் ஆய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன en_US
dc.language.iso other en_US
dc.publisher DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA en_US
dc.title சிரேஷ்ட இடைநிலை பிரிவு மாணவர்களின் பாடசாலை வரவின்மை கற்றல் அடைவில் ஏற்படுத்தும் தாக்கம் en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account